Wednesday, November 25, 2009

நான் யார்?


தமிழ்ல எழுதி எவ்ளோ நாள் ஆச்சு? குட்டி intro குடுத்துட்டு நான் வேலைக்கு கிளம்பணும்!

My dear அப்பா, செல்ல அம்மா, டுபுக்கு அண்ணா, என்னோட favourite of all பாட்டி - அப்பாவோட அம்மா! That's my family! பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை! Basically சென்னை முரட்டுத்தனம் என் குடும்பத்தில் சகஜம்!

Super சண்டை போடுவோம் அப்புறம் கட்டி புடிச்சு கொஞ்சிப்போம்... எங்க வீட்டு சண்டை கொஞ்சம் different! சிதம்பரம் Economic reforms பத்தி சொன்னது சரியா இல்ல தப்பா? ஜார்ஜ் புஷ் and ஆப்கானிஸ்தான் பாலிசி - அம்மா சொல்ற மாதிரி பைசா ப்ரோயோஜனம் இல்லாத டாபிக்ஸ் - சாப்ட்ரச்சே தொட்டுக்க ஊர்கா வேண்டாம், இந்த topics போதும் - discussion கார சாரமா இருக்கும்... நான் தான் டாப் வாய்ஸ்! கொஞ்சம் சவுண்ட் அதிகமா விடுவேன்!

அப்பா இஸ் எ ஜெனரல் மேனேஜர், அம்மா housewife - அண்ணா ஒரு டுபுக்கு - இல்ல இல்ல பாவம், நல்ல பைய்யன், US ல MS முடிச்சிட்டு இப்போ வேலை பண்ணிண்டு இருக்கான்! எப்போ பாத்தாலும் ஆன்லைன் (Online) ல இருப்பான், கேட்டா "பிஸி" ன்னு ஓடி போய்டுவான் :-( எங்க நான் எதாவுது வாங்கிண்டுவான்னு  சொல்லிடுவேனோன்னு பயம்!!

எத பத்தி எழுதலாம்ன்னு யோசிச்சிண்டிருக்கும் போது என் குடும்பமே ஒரு கதம்பமா இருக்கும் போது வேற எந்த topic க்கும் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!

எல்லாரபத்தியும் சொன்ன நான் என் பெருமையை பாடலையேன்னு வருத்த படவேண்டாம் - நாளைக்கு சொல்றேன் :-)

புராணம் ஆரம்பிச்சிடுச்சிய்யா, ஆரம்பிச்சிடுச்சி! :-)

No comments:

Post a Comment