Wednesday, November 25, 2009

வணக்கம்!

வணக்கம்!

இந்த புதிய இணையதளதில் உங்களுடன் கலந்துரயடுவதை நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொன்டிருக்கின்றேன்!

என் புனை பெயர் சுஜாதா ஜூனியர் or குட்டி சுஜாதா! ஒரு inspiration ன்னு வேசிக்கொங்கோளேன்!

என் மானசீக குரு சுஜாதா அவர்கள் இறந்ததர்க்குப்பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டேன்... எழுந்து பார்த்தல்,  உலகமே மாறிவிட்டது. சற்று முன் ஆழ்வார்பேட் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் பொது, சட் என்று யாரோ நடு மண்டையில் குட்டியது போல ஒரு feeling!

ஆங்கிலத்தில் blogging செய்து கொண்டிருந்த நான், எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஏன் blog செய்ய கூடாது என்ற கேள்வி தான் அந்த குட்டு.

முடிவு செய்து விட்டேன்! இதோ அடுத்த சூர்யோதயதிற்கு முன்பே  ஆரம்பித்து விடலாம் என்று முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன்! உங்களையும், என் குருவையும் நம்பி!

அம்மாவின் குரல் கேட்கின்றது - எனக்கு காபி போட்டு தூங்க வைக்க எழுந்துட்டாள் போலும்... சரி சரி அப்புறம் பேசலாம் -

ம்ம்ம்...

உலகமே எழுந்ததற்கு பிறகு தான் எனக்கு தூக்கம் - 


Bye Bye மீண்டும் சிந்திப்போம் - I mean சந்திப்போம்!

அன்புடன்,
குட்டி சுஜாதா.

1 comment:

  1. வாங்க சுஜாதா....பூங்கொத்துடன் வரவேற்கிறேன்!

    ReplyDelete