Thursday, November 26, 2009

கண் விழித்துப்பார்த்தபோது....

செப்டம்பர் மாதம், கண்ணைக்கூசும் வெளிச்சம் சட் என கண்ணை மூடிக்கொண்டேன்....என்னைச்சுற்றி ஒரே ஆரவாரம்! என்னை தொட்டு தொட்டு ஏதோ செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது - but I just cannot understand! ஒன்றும் புரியவில்லை!

சரி இந்த குழப்பத்திற்கு முடிவுகட்டவேண்டும் என்று மீண்டும் கண்களை திறந்து பார்த்தேன், மீண்டும் ஒரே ஆரவாரம்! அடடா, என்ன உலகமடா சாமி! என்னை எங்கே கொண்டு வந்துவிட்டாய் என்று என் கடவுளிடம் கேட்டேன்! அவளும், அவனும் என்னைப்பார்த்து சிறிதாய் புன்னகித்து, wish செய்தனர்! That's all - they left! அன்று பார்த்ததுதான்!

என் அம்மாவை மட்டும் என்னால் அடையாளம் காண முடிகிறது, but who are others?
எதுவும் புரியாமல் என் அம்மாவை நோக்கி புன்னகித்தேன்! ஏனோ என்னால் பேசமுடியவில்லை. இருந்தாலும் நம்ப சிங்க குட்டி இல்லையா? என் அம்மாவிடம் சொன்னேன் - "I just want to sleep mom! இவங்கள போகச்சொல்லேன், உனக்கு நான் தொந்தரவு கொடுக்காமல் எவ்ளோ easy a...." சொல்லிமுடிப்பதற்குள் தூக்கம் என்னை கவர்ந்துவிட்டது!

அவள் புரிந்துகொண்டால் போலும், கொஞ்ச நேரத்துல எல்லா சத்தமும் ஓய - நிம்மதியா தூங்கினேன்! எவ்ளோ நாள் தூங்கிநேண்ன்னு மட்டும் கேக்காதீங்க, I just slept like a hog!

விழித்து பார்த்தல் - அதே கூட்டம்! now, I was able to recognize another person! ஓ! அது தான் அப்பா! செம்ம smart! ஆனா அவரோட மீசை தான் ரொம்ப குதித்து! அவருக்கு நான் என்ன சொன்னாலும் புரிய மாட்டேன்றது, அவர் பாட்டுக்கு - "ஜ்ஜ்சுஜ்ஜ்சு, புச்சு, அச்சி, குச்சி, ஜ்ஜ்சுஜ்சு" ன்னு புலம்பிண்டு இருந்தார்! I was trying to talk to him, but he was not getting me at all!

சரி ...... why am I able to recognize this another person???? சற்று குழம்பி என் அம்மாவை நோக்கி "யாரு மா இவன்" ன்னு கேட்டேன் - she was a star!சட்டுன்னு புரிஞ்சுன்ட்டா! She introduced me to my brother, "இவன் தான் உன் அண்ணா, ஹாய் சொல்றான் பாரு" ன்னு அவனை கொஞ்சம் என் பக்கத்துல கொண்டு வந்தா! அவனை பாத்ததுமே புரிஞ்சுன்னுட்டேன், சரி இவன் தான் நம்மளை அப்பா அம்மா கிட்ட மாட்டிவிடற கேஸ், இவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு careful அ இருந்து கவனிக்கனும்ம்ன்னு! அவனுக்கு என்ன அறவே பிடிக்கலை போல, அப்பா - - - ன்னுட்டு அழுதுண்டே ஓடி போய்ட்டான்! ஏன்டா நான் அவ்ளோ அசிங்கமாவாடா இருக்கேன் ன்னு நினைச்சிண்டேன்! It's alright! - be careful with this fellow ன்னு எனக்கே நான் சொல்லிண்டு - மறுபடியும் தூங்கிட்டேன்!

என் அப்பா & அம்மாவின் கண்களில் எவ்ளோ கனவுகள், they don't know that children can see it!

[பின்ன குழந்தைகள் எப்புடி நீங்க நினைச்சதெல்லாம் செய்யிறாங்கன்னு நினைக்கிறீங்க??

ஆனா அம்மாவோட கனவு தான் .....bad! இப்போ தான் பொறந்திருக்கேன், அதுக்குள்ளே ரங்கநாதன் தெருவுல எனக்கு கல்யாண shopping பண்ண என்ன அழைசிண்டு போயிண்டிருக்கா! அம்மா, just give me some time please!

That was my first day here on earth! What a welcome! ஓவரால் .......என்ஜாய் பண்ணினேன்!

நோட்:  அஷ்வின் போன் பண்ணி இப்போ தான் வெச்சான், தூக்கமே வர்ல...I could not help recollecting my childhood! அவ்ளோ பேசினோம்!! கண்டிப்பா இப்போ போய் தூங்கப்போறேன்! 
Good night!

No comments:

Post a Comment