Saturday, November 28, 2009

ஸ்கூல் - Part I

முதல் நாள்!! ஸ்கூலுக்கு போறதுக்கு அப்பா, அம்மா, அப்போ தாத்தா, பாட்டி என்னை ஜோரா ready பண்ணி எங்க ஆத்து வெராண்டாவுல உக்காரவேச்சிட்டு என் அண்ணனையும் காவலுக்கு வெச்சிட்டு ஏதோ சின்ன வேலையா உள்ள போனாங்க... லைட்டா என் அண்ணனப்பத்தேன் அவன் ரொம்ப மும்மரமா ஷூ லேச சரி செஞ்சிண்டு  இருந்தான் - சட்டுன்னு ஒரு jump - சவுண்டே இல்லாம என் காட்டுக்கு அடீல போய் உக்காந்துன்னுட்டேன் -

என்ன நினைச்சு அப்புடி பண்ணிருப்பேன்?? அததென்ன காட்டுக்கடீல Harry Potter ல வர்ற invisible உலகமா இருக்கு? என்னமோ அங்க போய் ஒளிஞ்சுன்னுட்டா நம்பள யாரும் கண்டுபிடிக்க முடியாது அப்புறம் நம்பள யாரும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகமாட்டங்கன்னு ஒரு சின்ன கணக்குத்தான்ன்னு வெச்சிக்கொங்கோளேன்! 

எல்லாரும் கிளம்பி வெளீல வந்து ஆத்த பூட்டிட்டு பொறப்பட ரெடியா இருந்தா - என்னை காணோம்!

As usual என் அண்ணாகிட்டே கேட்டாங்க.......... அவன் எங்கடா நம்பள மாட்டிவிட்டிடுவாநோன்ன்னு நினைச்சேன், பட் அழற சத்தம் கேட்டுது.... I was confused!!

ஏதோ சரியா படலை, சரி என்னன்னு வெயிட் பண்ணி தான் பாப்போம்ன்னு பாத்தா பய்யன் அப்பாகிட்டே, sorry ப்பா நான் அவள தொலச்சிட்டேன்னு அழுதுண்டுருக்கான்! எனக்கு பாவோமா போச்சு நானும் அழுதுண்டே வெளில வந்தேன்... But, இப்போ நினைச்சுப்பாத்தா அவன் என்ன ஒரு பென்சில், பேனா, ரப்பர் மாதிரீன்னா treat பண்ணிருக்கான்....அவன்யாரு என்ன தொலைக்க???

அன்னிக்குப்பண்ணின ஆர்ப்பாட்டம் இன்னிக்கும் மறக்கமுடியல.... ஸ்கூல்ல ஒரு குண்டு பாட்டி என்னை பிடிச்சு தரதரன்னு இழுத்துண்டு போனா... கண்ணீரும் கம்பலையுமுமா கிளாசுக்குப்போனேன்! அன்னைக்கு ஆரம்பிச்சாது தான் இந்த மாரத்தான் படிப்பு - எப்போடா முடியும்ன்னு ஆயிடிச்சுங்க... by the way - அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு தான் என் அண்ணாவுக்கு ஒரு பேர் தேட ஆரம்பிச்சேன் - கடசீல நம்ப வடிவேல் சார் தான் கரெக்டான பேருக்கு ஐடியா குடுத்தது...."டுபுக்கு"!

First - Prayer!

பெரிய்ய சுர்ச்க்குள்ள எல்லாரையும் நிறுத்தி prayer பண்ண வெச்சாங்க... யாரு பாடறதுன்னு நினைக்கறீங்க....... டவுட்ஏ வேண்டாம் ..........என் அண்ணன் தான்!
உலக சோகமெல்லாம் சுமந்து நிற்கும் குழந்தைகளைப்பாத்தேன் - மனசுக்குள்ள நினச்சிண்டேன், உங்களுக்கெல்லாம் தெரியுமோ இல்லையோ, இனிமே நமக்கு ட்டின்னு தாண்டான்னு!!!

அப்பாவும், அம்மாவும் என் அண்ணன்கிட்டே பேசறத கேட்டிருக்கேன்...
ரொம்ப கஷ்ட்டம் டா..... :-(

1 comment: